Wednesday, December 25, 2019

31) நான்மணிக்கடிகை


நான்மணிக்கடிகை
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Naanmanikkadigai
(Pathinen Keezhkanakku Noolgal)

தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இங்கு


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்றான
நான்மணிக்கடிகை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நான்மணிகள்
எனும்
தொடரால்
குறிப்பிடப்படுவது

அறிவார்யார்
நல்லாள்
பிறக்குங் குடி
எனும் தொடர்
இடம்பெறுவது


நான்மணிக்கடிகை

(நான்கு + மணி + கடிகை)


இது
(நான்மணிக்கடிகை)

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்
அறம்/நீதி சார்ந்த நூல்


நான்கு வகை
மணிகளால்
கோர்க்கப்பட்ட மாலை
நான்மணிக்கடிகை

அதனைப் போல்

ஒவ்வொரு பாடலிலும்
ஒத்த நான்கு
சிறந்த கருத்துகள்
சேர்த்திணைத்துக்
கூறப்படுவதால்

நான்மணிக்கடிகை
எனப்
பெயர்பெற்ற
இந்நூல்


(பாடியவர்)

விளம்பி நாகனார்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

நான்கு
அடிகளைக்
கொண்டு


(பாடல்களின்
பா வகை)

வெண்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நூறு (100)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்து
பாடல்கள் இரண்டுடன்
நானூற்றிரண்டு (102)
பாடல்கள்)


இதில்
(நான்மணிக்கடிகை நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

திருமால்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature




No comments:

Post a Comment