Wednesday, December 25, 2019

17) புறநானூறு


பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள்
எட்டுத்தொகை  08-புறநானூறு

Pathinenmelkanakku Noolgal
Ettuththogai (Eight Anthologies)  08-Puranaanuru

சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


இங்கு


எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
புறநானூறு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை

என

எட்டுத்தொகை
நூல்களுள்
எட்டாவதாகச்
சொல்லப்படுவது

தமிழ் நாட்டு
வரலாற்று நூல்
என்று
அழைக்கப்படுவது

தமிழுக்குத்
தொண்டாற்றிய
ஜி.யு. போப்
அவர்களை
மிகவும்
கவர்ந்த நூல்

தமிழரின்
வாழ்வியல்
சிந்தனைகளைக்
கருவூலமாகக்
கொண்டிருப்பது

சங்க காலத்து
அரசர்களின்
ஆட்சி முறை
மக்களின்
வாழ்க்கை நிலை
குறித்த தகவல்கள்
மிகுந்து
காணப்படுவது

பண்டைகாலத்
தமிழர்களின்
வரலாற்றையும்
பண்பாட்டையும்
அறிய உதவும்
நூலாகத் திகழ்வது


புறநானூறு

(புறம் + நான்கு + நூறு = புறநானூறு)


புறவாழ்வின்
பெருமைகளை
நாம் உணரப்
பெருந்துணைபுரியும்

இந்நூல்
(புறநானூறு)


(பாடியவர்
எண்ணிக்கை)

நூற்றைம்பதுக்கும் (150)
மேற்பட்ட
புலவர்களால்


(பாடல்களின்
அடியெல்லை)

நான்கு (4) அடிச்
சிற்றெல்லையும்
நாற்பது (40) அடிப்
பேரெல்லையும்
கொண்டு


(பாடல்களின்
பொருள்)

புறப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட

(சில வஞ்சிப்பா
அடிகளும் உள்ளது)


(பாடல்கள்
எண்ணிக்கை)

நானூறு (400)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு
(கடவுள் வாழ்த்துடன்)


இந்நூலைத்
(புறநானூறு நூலைத்)


தொகுத்தவர்
தொகுப்பித்தவர்

யாரெனத்
தெரியவில்லை


இதில்
(புறநானூறு நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலைப்
பாடியவர்

பாரதம் பாடிய
பெருந்தேவனார்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

சிவபெருமான்


இதன்
(புறநானூறு நூலின்)


வேறு பெயர்கள்

புறம்
புறப்பாட்டு
புறம்பு நானூறு
தமிழர் வரலாற்றுப் பெட்டகம்
தமிழர் களஞ்சியம்
திருக்குறளின் முன்னோடி
தமிழ்க் கருவூலம்


இதில்
(புறநானூறு நூலில்)


கூறப்படாத
புறப்பொருள் திணை

உழிஞைத் திணை


இந்நூலை
(புறநானூறு நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே. சாமிநாதையர்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature




No comments:

Post a Comment