Wednesday, December 25, 2019

2) வாழ்க்கைக் கல்வி


வாழ்க்கைக் கல்வி

Life Education

கல்வி என்பது

அறியாமை நீக்கி
அறிவை பெருக்கி

மனிதனை
மனிதனாக்கி

அவனுக்கு

அறம்
பொருள்
இன்பம்
வீடு

எனும்
நால்வகைப்
பயன்களை

வாழ்வில்
வழங்குவது


அந்த

உண்மையை
உணர்ந்தும்


நாம்

பள்ளியில்
படித்தது
பாடத்திட்டம் மட்டுமே

கல்லூரியில்
கற்றது
காசாக்க மட்டுமே

பணத்தால்
பெற்றது
பட்டங்கள் மட்டுமே

தேர்வில்
வாங்கியது
மதிப்பெண்கள் மட்டுமே

வேலையைத்
தேடித்தேடி
அலைந்தது மட்டுமே

அலுவல்களில்
அடைந்தது
அவமானங்கள் மட்டுமே

உறவுகளால்
உணர்ந்தது
நடிப்பினை மட்டுமே

வணிகத்தில்
வாங்கியது
கலப்படங்கள் மட்டுமே

அரசியலில்
அறிந்தது
சுருட்டல்கள் மட்டுமே

அதிகாரத்தால்
அடைந்தது
அல்லல்கள் மட்டுமே

ஞானிகளில்
கண்டது
போலிகள் மட்டுமே

பக்தியில்
பார்த்தது
பகல்வேசம் மட்டுமே

வாழ்க்கையில்
தொட்டது
தோல்விகள் மட்டுமே

இருப்பினும்

ஏட்டுக்
கல்விக்கு மட்டுமே

ஏற்றம்
தந்து விட்டோம்
ஏணியாகவும்
இருந்து விட்டோம்


அதனால்

நாகரீகம் என்னும்
நரக வாழ்க்கையில்

சுயநலமே
பெரிதாகி

பொதுநலத்தைப்
புதைத்துவிட்டு

பணமே
கதியென்று

போலியான
வாழ்க்கையில்

சிக்கி
சீரழிந்து வரும்

நமது
வாழ்க்கையை

அர்த்தம் உள்ளதாக்க
ஆனந்த மயமாக்க
அமைதி நிறைந்ததாக்க

கற்க வேண்டிய
வாழ்க்கைக்
கல்வியைக்

கற்றுக் கொள்ளாமல்
காலத்தைக்
கடந்து விட்டோம்

வாழ்க்கைப் பாதையில்
வழி தவறி
வந்து விட்டோம்


இனியும் வேண்டாம்
இந்த இழிநிலை

பட்டங்கள் பெற்றும்
பயனில்லை நமக்கு

ஏட்டு சுரைக்காய்
கறிக்கு உதவாது

வெறும்
ஏட்டுக் கல்வி
வாழ்க்கைக்கு உதவாது


இனியாவது

அறிவு
அனுபவம்
ஆற்றல்
ஆன்மீகம்

ஆகியவற்றை
அளித்திடும்

வாழ்க்கைக் கல்வி

பயின்று
பயன்பெறுவோம்

அதற்கான
ஒரே வழி

பள்ளி
பல்கலைக் கழகப்
பாட நூல்களோடு

நூலகத்தில் உள்ள
நூல்களையும்

மாணவப் பருவத்தில்
மட்டுமல்ல
மாணவப் பருவம்
முடிந்தாலும்

வாழ்நாள் முழுதும்

வாசகனாய் இருந்து
வாசிப்பது ஒன்றே.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature





No comments:

Post a Comment